
இசை முரசு FM என்பது நாகர்கோவில் அருகே உள்ள ஆளூரைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் முஹம்மது அஸ்கர் அவர்களால் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் இணைய வானொலி ஆகும். நாகூர் ஹனிபாவின் பாடல்கள், இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவுகள், திருக்குர்ஆன் நிகழ்ச்சிகள், தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள், மேலும் விவசாயம், வணிகம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளின் சிறந்தவர்களுடனான நேர்முகப் பேட்டிகள் ஒலிபரப்பாகின்றன.